விவசாய முன்னேற்றம் தேசிய கருத்தரங்கு
விவசாய முன்னேற்றம் தேசிய கருத்தரங்கு |
சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும்
இந்திய அரசின் தேசிய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து ‘
இந்தியாவில் கிராமப்புற விவசாயத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் சவால்‘ என்ற
தலைப்பில் தேசிய அளவிலான இருநாள் கருத்தரங்கை நடத்தியது. சிறப்பு
விருந்தினராக கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு
பொருளாதாரத்துறை பேராசிரியர் அருணாச்சலம் கலந்து கொண்டு கருத்தரங்கை
துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்தியாவில் விவசாயத்துறையின் இன்றைய
நிலை பற்றியும், விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு அரசாங்கத்தின் பங்கு,
இன்றைய இளைஞர்களின் ஈடுபாடு ஆகியவற்றை பற்றியும் தமது உரையில்
விளக்கினார்.
முன்னதாக கல்லூரி நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி தலைமை ஏற்று விழா மலரினை வெளியிட்டார். கல்லூரி செயலர் அருந்ததி, துணைச்செயலர் செல்வி. மலர்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் வாழ்த்திப் பேசினார்.
மேலாண்மைத் துறைத்தலைவர் சரவணகுமார் வரவேற்றார். கருத்தரங்கில் வெளிமாநிலங்களில் இருந்து சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் தலைமை பேச்சாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
முன்னதாக கல்லூரி நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி தலைமை ஏற்று விழா மலரினை வெளியிட்டார். கல்லூரி செயலர் அருந்ததி, துணைச்செயலர் செல்வி. மலர்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் வாழ்த்திப் பேசினார்.
மேலாண்மைத் துறைத்தலைவர் சரவணகுமார் வரவேற்றார். கருத்தரங்கில் வெளிமாநிலங்களில் இருந்து சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் தலைமை பேச்சாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
0 comments:
Post a Comment