தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, January 6, 2014

பவானிசாகர் காவலர் குடியிருப்பில் யானைகள் புகுந்து அட்டகாசம்
*************************************************************

பவானிசாகர் காவலர் குடியிருப்பில் யானைகள் புகுந்து அதன் சுற்றுப்புற சுவர்களை இடித்து சேதப்படுத்தின

பவானிசாகர் காவலர் குடியிருப்பில் யானைகள் புகுந்து அதன் சுற்றுப்புற சுவர்களை இடித்து சேதப்படுத்தின.

பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் ஏராளமான யானைகள் நடமாடுகின்றன.அவை அவ்வப்போது நீரேற்று நிலையத்தில் புகுந்து அட்டகாசம் செய்வதால் வனத்துறையினர் விரட்டுவதும் அவை காட்டுக்குள் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை  அணை நீர்த்தேக்கப்பகுதிக்கு வந்த  மூன்று காட்டுயானைகளை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பட்டாசு வெடித்து துரத்தியதால் அவை பவானிசாகர் காவலர் குடியிருப்புக்குள் புகுந்தன. யானைகள் பிளிறல் சப்தம் கேட்டு வெளியே வந்த போலீஸார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் அந்த யானைகள் குடியிருப்பு சுற்றுப்புற சுவரை இடித்து தள்ளின. இதனால் மேற்குப்புற சுவற்றின் ஒரு பகுதி சேதமடைந்தது. போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர்கள் பட்டாசு வெடித்து யானைகளை துரத்திவிட்டனர். அதிகாலையில் அட்டகாசம் செய்த யானைகள் மீணடும் வரும் என்பதால் காவலர் குடும்பத்தினர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

0 comments:

Post a Comment