திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் கரும்பு பாரம் லாரி கவிழ்ந்ததில்
சத்தியமங்கலம்- மைசூர் தேசியநெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய
நெடுஞ்சாலையில் 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை உள்ளது.
குறுகிய அதிக வளைவுகள் கொண்ட இந்த திம்பம் பாதையில் கனரக வாகனங்கள்
அடிக்கடி பழுதாகி நின்பதும் போக்குவரத்தை சரிசெய்வதும்
வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையிலிருந்து கரும்புபாரம் ஏற்றிய லாரி திருப்பூர் மாவட்டம்மடத்துக்குளம்
செல்வதற்காக வெள்ளிக்கிழமை திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.
லாரியை அரூர் அனுமன்தீத்தத்தை சேர்ந்த டிரைவர் வேடப்பன்(33) ஓட்டினார்.
கிளீனர் மடத்துக்குளம் பாலமுருகன் உடன் வந்தார். லாரி15 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது அதிக பாரம் காரணமாக லாரி
நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வளைவுபாதையில் கவிழ்ந்தது.
அப்போது,லாரியில் இருந்த கரும்புகள் மள மளவென சரிந்து சாலையில் சிதறியதால்
அவ்வழியாக பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால்,மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து
நின்றன.
அங்கு வந்த சத்தியமங்கலம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார்
சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 10 மணியளவில் லாரி சற்று அப்புறப்படுத்தப்பட்டு பஸ், கார் மற்றும்
வேன் போன்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், கனரக
வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், வாகனங்கள் ஆசனூர்
சோதனைச் சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன.
நண்பகல் 1 மணியளவில் மீட்பு வாகனம் மூலம் லாரியை
மீட்டு அப்புறப்படுத்திய பிறகு இரு மாநிலங்களிடையே சுமார் 4 மணி
நேரத்துக்கு பின் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.
0 comments:
Post a Comment