சத்தியில் திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழா
திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழா |
சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம்
குலாலர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் விசாக நட்சத்திரத்தில் திருநீலகண்டர்
குருபூஜை கொண்டாடப்படும். இதன்படி, செவ்வாய்க்கிழமை ஶ்ரீ பவானீஸ்வரர்
ஆலயத்தில் குருபூஜை விழா துவங்கியது. 63 நாயன்மார்களில் ஒருவரான
திருநீலகணடர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் வழிபாடுகளும் அதனைத்
தொடர்ந்து உற்வசமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில்
நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில்
உற்சவமூர்த்தி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து, திருநீலகண்டர் கோயிலில் நடந்த அன்னதானம் விழாவில் 250க்கும்
மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து சிறுவர்,சிறுமிகளுக்கு
பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை குலாலர் மன்றத்
தலைவர் எஸ்.கே.நாகராஜ், செயலாளர் எஸ்.என்.ஆறுமுகம்,பொருளாளர்
எஸ்.என்.காந்தி, இளைஞர் மன்ற தலைவர் எஸ்.ஜி.ரஞ்சித், செயலாளர்
எஸ்.ஏ.வெங்கேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment