தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Wednesday, January 22, 2014
Posted By:jayakanthan | At:8:28 PM
Be the first to comment!
ஊட்டி : ஊட்டியில் மூன்று பேரையும், இரண்டு மாட்டையும்கொன்று 19 நாட்களாக
பிடிபடாமல் தப்பித்து வந்த புலியை அதிரடிப்படையினர் சுட்டு
வீழ்த்தினர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலாடா பகுதி வனத்தில் கடந்த 4ம்
தேதி கவிதா என்ற பெண்ணையும், கடந்த 6ம் தேதி தொட்டபெட்டா பகுதியில்
சின்னப்பன் என்பவரையும், 8ம் தேதி குந்தசப்பை பகுதியில் முத்துலட்சுமி என்ற
பெண்ணையும் புலி கடித்துக் கொன்றது.இந்த புலியை சுட்டுப்பிடிக்க வனத்துறை,
அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் களமிறக்கப்பட்டனர். 50க்கும் மேற்பட்ட
இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் நவீன கருவிகளை பொருத்தி புலியை
பிடிக்கும் பணி நடந்தது. கடந்த 10, 11ம் தேதி குந்தசப்பை தேயிலை
தோட்டங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் புலி நடமாடியது
பதிவானது. புலியை பிடிக்க பல்வேறு பகுதிகளில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால்,
புலி சிக்கவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment