தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, January 20, 2014

ஆசனூர் அருகே எஸ்.ஐ. மீது தாக்குதல்

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.ஐ. ஆனந்தகுமார்

ஆசனூர் அருகே விசாரணைக்குச் சென்ற உதவி காவல் ஆய்வாளரின் மண்டையை உடைத்ததாக, ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

ஆசனூர் மலைப் பகுதியில் ஏராளமான சொகுசு தங்கும் விடுதிகள் உள்ளன. பல்வேறு இடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு தங்குவது வழக்கம். இந் நிலையில், அவிநாசியில் உள்ள உணவு விடுதி உரிமையாளர் மோகனசுந்தரம் (35), அவரது நண்பர்கள் 6 பேர் கேர்மாளத்தில் உள்ள தனியார் ஆடம்பர விடுதியில் சனிக்கிழமை அறை எடுத்து தங்கியுள்ளனர். 
இவர்களுக்கும் ஹோட்டல் நிர்வாகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஹோட்டல் மேலாளர், ஆசனூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் புகார் அளித்தார். இதையடுத்து, உதவி ஆய்வாளர் கு.ஆனந்தகுமார் கேர்மாளம் தனியார் விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார். 

குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் மோகனசுந்தரம் மற்றும் அவரது நண்பர்களை ஜீப்பில் ஏற்றி ஆசனூர் காவல் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் அழைத்து வந்து கொண்டிருந்தார். கெத்தேசால் என்ற இடத்தில் வந்தபோது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த உதவி ஆய்வாளரை, மோகனசுந்தரம் மது பாட்டிலால் தாக்கினாராம். இதில் எஸ்.ஐ. மண்டை உடைந்தது.

அப்போது, அவ்வழியாக வந்த ஆசனூர் ஊராட்சித் தலைவர் ஜடையன் மற்றும் கிராம மக்கள், உதவி ஆய்வாளரை மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஆசனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மோகனசுந்தரம் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்தனர்.

0 comments:

Post a Comment