புன்செய் புளியம்பட்டி தபோவனம் பள்ளி ஆண்டு விழா
***************************************************************************
***************************************************************************
புன்செய் புளியம்பட்டி தபோவனம் மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆண்டு விழாவிற்கு சாமியம்மா அவர்கள் தலைமை தாங்கினார்கள். புன்செய் புளியம்பட்டி மக்கள்நல சங்க தலைவர் டாக்டர் சுப்ரமணியன், வெற்றிப்பாதை நிர்வாக ஆசிரியர் கே.வேணுகோபால், ஜெய்சீஸ் ஈரோடு எச்செல் முன்னாள் தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தன்னம்பிக்கை பேச்சாளர் சக்சஸ் ஜெயச்சந்திரன் மாணவ மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை குறித்து சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் முத்துக்குமார் வரவேற்றார்.
1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிப்பு, நடனம், பேச்சு உள்பட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த 10 மாணவ மாணவியர்களுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் சார்பாக இந்த ஆண்டின் சிறந்த மாணவர் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதினை சத்தியமங்கலம் ரோட்டரி சங்க முன்னால் தலைவரும், எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரியுமான எம்.மணிகண்டன் வழங்கினார். அதேபோல் மாணவ மாணவியர்களுக்கு அன்பு, ஒழுக்கம் மற்றும் படிப்பு உள்பட பல்வேறு விசயங்களை சிறப்பாக கற்று தந்தமைக்காக ஆசிரியர் மூர்த்தி அவர்களுக்கு இந்த ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் பாடல், நாடகம், யோகா மற்றும் நடனம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேச ஒற்றுமை, குளோபல் வார்மிங், ஆங்கில மொழியின் அவசியம், யோகா கற்பதன் அவசியம் உள்பட பல்வேறு தலைப்புகளில் மாணவ மாணவியர்கள் நிகழ்த்திய நாடகம், தெருகூத்து, நடனங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் தபோவனம் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆண்டு விழாவிற்கு சாமியம்மா அவர்கள் தலைமை தாங்கினார்கள். புன்செய் புளியம்பட்டி மக்கள்நல சங்க தலைவர் டாக்டர் சுப்ரமணியன், வெற்றிப்பாதை நிர்வாக ஆசிரியர் கே.வேணுகோபால், ஜெய்சீஸ் ஈரோடு எச்செல் முன்னாள் தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தன்னம்பிக்கை பேச்சாளர் சக்சஸ் ஜெயச்சந்திரன் மாணவ மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை குறித்து சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் முத்துக்குமார் வரவேற்றார்.
1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிப்பு, நடனம், பேச்சு உள்பட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த 10 மாணவ மாணவியர்களுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் சார்பாக இந்த ஆண்டின் சிறந்த மாணவர் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதினை சத்தியமங்கலம் ரோட்டரி சங்க முன்னால் தலைவரும், எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரியுமான எம்.மணிகண்டன் வழங்கினார். அதேபோல் மாணவ மாணவியர்களுக்கு அன்பு, ஒழுக்கம் மற்றும் படிப்பு உள்பட பல்வேறு விசயங்களை சிறப்பாக கற்று தந்தமைக்காக ஆசிரியர் மூர்த்தி அவர்களுக்கு இந்த ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் பாடல், நாடகம், யோகா மற்றும் நடனம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேச ஒற்றுமை, குளோபல் வார்மிங், ஆங்கில மொழியின் அவசியம், யோகா கற்பதன் அவசியம் உள்பட பல்வேறு தலைப்புகளில் மாணவ மாணவியர்கள் நிகழ்த்திய நாடகம், தெருகூத்து, நடனங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் தபோவனம் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment