பவானிசாகர் அரசுப்பள்ளியில் வேட்டி தினம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா
பவானிசாகர் மேல்நிலைப்பள்ளியில் வேட்டி தினம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு
தலைமை ஆசிரியர் எம். நஞ்சன் தலைமை வகித்து சமத்துவ பொங்கல் மற்றும் வேட்டி
தினத்தினை தொடங்கி வைத்தார். பவானிசாகர் பேரூராட்சி துணைத்தலைவர்
செல்வம் முன்னிலை வகித்தார்.
விழாவில் அனைத்து ஆசிரியர்களும் வேஷ்டி அணிந்து
பொங்கலை கொண்டாடினர். பள்ளியில் ஆசிரியர்கள் பொங்கல் சமைத்து அனைத்து
மாணவர்களுக்கும் வழங்கி வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும்
பரிமாறிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்
தி.தேவராஜ்,பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள்,.அனைவருக்கும் கல்வி இயக்க
ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து
கொண்டனர்
0 comments:
Post a Comment