திம்பம் மலைப்பாதையில் ஆசிட் லாரி கவிழந்து விபத்து
திம்பம் மலைப்பாதையில் ஆசிட் லாரி கவிழ்ந்து கொட்டும் நிலையில் உள்ளது |
சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில்
ஆசிட் லாரி கவிழ்ந்து கொட்டும் நிலையில் உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக
மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக திண்டுக்கல் & பெங்களுரு தேசிய
நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக இரு மாநில அரசுப்பேருந்துகள் மற்றும் பல
மாநில கனரக சரக்குப்போக்குவரத்து வாகனங்கள் 24 மணிநேரமும் பயணிக்கின்றன.
இச்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27
அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் திம்பம் மலைப்பாதை உள்ளது. அனுமதிக்கப்பட்ட
அளவை விட கூடதல் பாரம் ஏற்றிவரும் கனரக வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு
மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று
மேட்டுரிலிருந்து மைசூருக்கு ஹைட்ரோகுளோரிக் ஆசிட் லோடு ஏற்றிச்சென்ற
டேங்கர் லாரி 7 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை
இழந்து பின்பக்கமாக மலைப்பாதையில் சரிந்து தலைகீழாக நின்றுள்ளது. டேங்கரில்
ஆசிட் உள்ளதால் கசிந்து விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதே
போன்று கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு பஞ்சு பாரம் ஏற்றி வந்த லாரி
திம்பம் மலை உச்சியில் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இரு
விபத்துக்களிலும் லாரி டிவைர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
0 comments:
Post a Comment