தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, January 16, 2014

பவானிசாகர் தொட்டம்பாளையத்தில் கத்திபோடும் விழா

பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் விழா

பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்திபோடும் விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, தொட்டம்பாளையம் பவானி ஆற்றங்கரையில் சக்தி அழைத்தல் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர்கள் பவானிஆற்றில் குளித்துவிட்டு, மஞ்சள் வேஷ்டி அணிந்து  தாரை தப்பட்டையுடன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். அப்போது, அவர்கள் 'சவுடேஸ்வரி தாயே' என்ற பக்தி பரவசத்துடன் தோளில் கத்திபோட்டபடி ஊர்வலமாக வந்தனர். சில பக்தர்கள் வயிற்றில் வாழைக்காய் வைத்து கத்தியால் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நண்பகலில் நடைபெற்ற பெருபொங்கல் பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை மாலையில் நடைபெற்ற அம்மன் வீதியுலாவில் அலங்கரிக்கப்பட்ட சிம்மவாகனத்தில் சவுடேஸ்வரி அம்மன்  சவுடேஸ்வரிஅம்மன், பங்களாமேடு, அண்ணாநகர், விக்னேஷ்நகர், ராஜீவ்நகர், வினோபாஜி  வீதி மற்றும் தேவாங்கபுரம் வீதியில் உலா வந்து பத்தர்களுக்கு அருள்பாலித்தார்.

0 comments:

Post a Comment