தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்
மக்கள் நிலை ஆய்வு நிகழ்சிகள் *******************************************************************************************
மக்கள் நிலை ஆய்வு நிகழ்ச்சி |
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பொதுமக்களிடம் மக்கள் நிலை ஆய்வு நிகழ்ச்சி பவானிசாகர் ஊராட்சி
ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராமம்தோறும் பொதுமக்களிடம் மக்கள் நிலை ஆய்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.ஏழை மக்களை கண்டறிந்து அவர்களை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சிக்கு கொத்தமங்கலம் ஊராட்சி தலைவர் புலி நாகராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், கொத்தமங்கலம் ஊராட்சி பகுதியிலுள்ள வீடுகளின் வரைபடங்களை வரைந்து பல வித வண்ண பொடிகளால் அலங்கரித்தனர்.
மக்கள் நிலை ஆய்வு சமூகநல
பயிற்றுனர்கள் பவானி ஒன்றியம் குணவதி,கோபி ஒன்றியம் மாலதி ஆகியோர்
மேற்பார்வையில் மகளிர் சுய உதவிக்குழுவின்வழிகாட்டி உதவியாளர்கள்
மலர்விழி, ஈஸ்வரி, சுதாமணி, நதியா, கோகிலா, சுலோச்சனா,ஆகியோர் கலந்து கொண்டு வரைபடங்களை வரைந்தனர். இந்நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்
0 comments:
Post a Comment