சத்தி அருகே பைக்-மொபட் மோதல்: பெட்ரோல் பங்க் ஊழியர் பலி
சத்தியமங்கலம் அருகே பைக்-மொபட் மோதிக்கொண்டதில் இளைஞர் பலியானார்.
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டுமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர்
ராஜேந்திரன்(25). பெட்ரோல் பங்க் ஊழியர். இவர் ஞாயிற்றுக்கிழமை பைக்கில்
பிரகாஷ்(21) என்பவருடன் புன்செய் புளியம்பட்டி சென்று கொண்டிருந்தார்.
செண்பகபுதூர் ஒப்பலனுரைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி ராஜாமணியுடன் மொபட்டில்
சத்தி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கோவை சாலை செண்பகபுதூர்
வளைவில் திரும்பும்போது பைக்-மொபட் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் பைக்கை
ஓட்டி வந்த ராஜேந்திரன் சம்பவயிடத்திலேயே இறந்தார். இந்த விபத்தில்
காயமடைந்த பிரகாஷ், தங்கராஜ், இவரது மனைவி ராஜாமணி ஆகியோரை 108 ஆம்புலன்ஸ்
ஊழியர்கள் மீட்டு கோவை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.இச்சம்பவம் குறித்து சத்தி போலீஸார் வழக்குப்பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்
0 comments:
Post a Comment