திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது ஏற்பட்டதால் சத்தி- மைசூர் சாலையில் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது |
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது ஏற்பட்டதால் சத்தி- மைசூர் சாலையில் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய
நெடுஞ்சாலையில் 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை
உள்ளது. ஓசூருக்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் முக்கியமான
இச்சாலை வழியாக கனரக வாகனங்கள் மற்றும் இருமாநில அரசுப்பேருந்துகள் 24 மணி
நேரமும் பயணிக்கின்றன.
இந்நிலையில், கோவையிலிருந்து கோதுமை பாரம் ஏற்றிய லாரி
மைசூர் செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. லாரியை
சத்தியமங்கலத்தை சேர்ந்த டிரைவர் சுரேஷ்(31) ஓட்டினார். 12வது கொண்டை ஊசி
வளைவில் திரும்பும்போது அதிக பாரம் காரணமாக லாரியின் பின்பக்க ஆக்ஸில்
முறிந்து நகர்ந்து செல்ல முடியாமல் நடுரோட்டில் நின்றது.
இதனால் மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள்
செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த வந்த சத்தியமங்கலம்
நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை
சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். கீழிருந்து மேலே செல்லும் வாகனங்கள்
பண்ணாரி சோதனைச்சாவடியிலும், மேலிருந்து கீழே வரும் வாகனங்கள் ஆசனூர்
சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன.
அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து
பாதிக்கப்பட்டதால் கொட்டும் பனியில் பயணிகள் உணவு மற்றும் குடிக்க நீரின்றி
தவித்தனர். ஏராளமான பயணிகள் மலைப்பாதையில் நடைபயணமாக பண்ணாரியை
சென்றடைந்தனர்.நண்பகல் 12 மணிக்கு பழுதான லாரியை அப்புறப்படுத்திய பிறகு
இரு மாநிலங்களிடையே வானகப் போக்குவரத்து மீண்டும் துவங்கியது
0 comments:
Post a Comment