ஐயப்பசுவாமி திருவீதியுலா
பவானிசாகர் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் 43 ம் ஆண்டு பொதுப்பூஜை மற்றும் இறைவழிபாடு பவானிசாகரில் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு பள்ளி மாணவ மாணவியருக்கு கேசவன் குருசாமி நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டது. நேற்று காலை டணாய்க்கன் கோட்டைக்கோவிலில் இருந்து செண்டை வாத்யம் முழங்க யானை மீது ஐயப்பசுவாமி திருவீதியுலா தொடங்கி பவானிசாகர், கல்கொத்து, பகுடுதுறை, இலங்கை அகதிகள் முகாம், முடுக்கன்துறைசந்தை வழயாக தொட்டம் பாளையம் சென்றடைந்தது. அங்குள்ள ஆலயங்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு யானை திருவீதியுலா மாலை பவானிசாகர் முன்னாள் ராணுவத்தினர் காலனியில் உள்ள விழாப்பந்தலை வந்தடைந்தது. பின்னர்
சிறப்பு பூஜைகள் மற்றும் வானவேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது.
பவானிசாகர் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் 43 ம் ஆண்டு பொதுப்பூஜை, சிறப்பு பூஜைகள் வானவேடிக்கை மற்றும் ஐயப்பசுவாமி திருவீதியுலா |
பவானிசாகர் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் 43 ம் ஆண்டு பொதுப்பூஜை மற்றும் இறைவழிபாடு பவானிசாகரில் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு பள்ளி மாணவ மாணவியருக்கு கேசவன் குருசாமி நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டது. நேற்று காலை டணாய்க்கன் கோட்டைக்கோவிலில் இருந்து செண்டை வாத்யம் முழங்க யானை மீது ஐயப்பசுவாமி திருவீதியுலா தொடங்கி பவானிசாகர், கல்கொத்து, பகுடுதுறை, இலங்கை அகதிகள் முகாம், முடுக்கன்துறைசந்தை வழயாக தொட்டம் பாளையம் சென்றடைந்தது. அங்குள்ள ஆலயங்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு யானை திருவீதியுலா மாலை பவானிசாகர் முன்னாள் ராணுவத்தினர் காலனியில் உள்ள விழாப்பந்தலை வந்தடைந்தது. பின்னர்
சிறப்பு பூஜைகள் மற்றும் வானவேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது.
0 comments:
Post a Comment