சத்தியமங்கலம் கோணமூலை ஊராட்சியில் மகிளாசபா
சத்தி கோணமூலை ஊராட்சியில் மகிளாசபா |
சத்தி கோணமூலை ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகிளாசபாவில் மகளிர் வாழ்வாதாரம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சத்தி
கோணமூலை ஊராட்சியில் நடைபெற்ற மகிளாசபாவிற்கு ஊராட்சித் தலைவர்
பத்மினிசண்முகம் தலைமை வகித்தார்.துணைத் தலைவி மகேஸ்வரி முன்னிலை
வகித்தார். இக்கூட்டத்தில் பெண்கள் மேம்பாட்டுக்கான ஊரக வாழ்வாதாரம்,
ஊட்டச்சத்து, பெண்கள் சுகாதாரம்,அனைவருக்கும் கல்வி, குழந்தைகள் வளர்ச்சி,
மகளிர் பொருளாதாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகளிர்
மட்டும் கலந்துகொள்ளும் இதில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், கிராமமக்கள்
மற்றும் மகளிர் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment