தாளவாடியில் கிராமசபா கூட்டம்
தாளவாடி மல்லன்குழி ஊராட்சி ஒங்கலபுரத்தில் கிராமசபா கூட்டம் |
தாளவாடி மல்லன்குழி ஊராட்சி ஒங்கலபுரத்தில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
65வது
குடியரசு தினவிழாவையொட்டி, தாளவாடி ஊராட்சி ஒன்றியம் மல்லன்குழி ஊராட்சி
ஒங்கலபுரம் ஊராட்சித் துவக்கப்பள்ளியில் தாளவாடி ஊராட்சிச ஒன்றியக்குழுத்
தலைவர் கெம்பாமணி தேசியகொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.அதனைத்
தொடர்ந்து, நடைபெற்ற கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் ரங்கசாமி
தலைமை வகித்தார். துணைத்தலைவி சிக்கம்மா வரவேற்றார். ஊராட்சி
ஒன்றியக்குழுத் தலைவர் கெம்பாமணி முன்னிலையில் நடைபெற்ற கிராமசபா
கூட்டத்தில் குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதி, பெண்கள் மேம்பாடு
உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தாளவாடி வட்டார வளர்ச்சி
அலுவலர் எம்.குணசேகரன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.ரவி மற்றும்
உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment