பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பண்ணாரி அம்மனை தரிசித்தனர் |
தைப்பொங்கலையொட்டி,சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன்
கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வரத் துவங்கினர். அதிகாலை நடந்த
சிறப்பு அலங்கார பூஜையில் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு
அருள்பாலித்தார் பண்ணாரி அம்மன்.பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை
தரிசித்தனர்.புதுமணத்தம்பதி மற்றும் இளைஞர்கள் இதில் அதிகளவில்
கலந்துகொண்டனர். சத்தியில் இருந்து கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள்
இயக்கப்பட்டன. சத்தி டிஎஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்தனர்.
0 comments:
Post a Comment