தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, February 24, 2014

ஜெயலலிதா அளித்த பேட்டி: 



* தேசிய கட்சிகளான, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கூட்டணிக்கு தடுமாறுவது குறித்து உங்கள் கருத்து?
இது குறித்து, நான் கருத்து சொல்வதை விட, அந்த கட்சிகளிடம் கேட்டால் தான், நன்றாக இருக்கும்.

* கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. வேறு கட்சிகளுடன், பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதா?
இந்த கூட்டணி போதும்.

* தேர்தலில், எதை மையமாக வைத்து பிரசாரம் செய்ய உள்ளீர்கள்?
ஏற்கனவே அறிவித்தபடி, எங்களின் தாரக மந்திரம், அமைதி, வளம், வளர்ச்சி. மேலும், எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வோம் என்பதை, தேர்தல் அறிக்கையில் சொல்வோம். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது; விரைவில், அது வெளியிடப்படும்.

* உங்கள் பிறந்த நாள் செய்தியாக, மக்களுக்கு எதை தெரிவிக்க விரும்புகிறீர்கள்?
மக்கள் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.அமைதி, வளம், வளர்ச்சி, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏற்பட, அனைவரும் பாடுபட வேண்டும்.

* மூன்றாவது அணியில், 14 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த கட்சிகளுக்காக, பிற மாநிலங்களில், பிரசாரம் செய்ய செல்வீர்களா?
மிழகம், புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளில் மட்டும், கவனம் செலுத்த உள்ளேன்.

* ராஜிவ் கொலை வழக்கில், தண்டனை பெற்றவர்களை விடுவிக்க, மத்திய அரசு நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதே?
இவ்வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதை கவனமாக கவனித்து வருகிறோம். எங்கள் கருத்துக்களை, நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம். சட்டப்பூர்வமாக எதை செய்ய வேண்டுமோ, அதை ஆலோசித்து செய்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.

0 comments:

Post a Comment