சத்தி வனத்தில் அழுகிக் கிடந்த சிறுத்தை உடல்
சத்தியமங்கலம் வனத்தில் அழுகிக் கிடந்த சிறுத்தை உடலை கைப்பற்றிய வனத்துறையினர் அதன் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் குத்தியாலத்தூர்
காப்புக்காடு பெரியகுளம் வனப்பகுதியில் வனத்தையொட்டியுள்ள யானை தடுப்பு
அகழியில் சிறுத்தை இறந்து கிடப்பதாக கிடைத்தது. இதையடுத்து, சத்தி புலிகள்
காப்பக கள இயக்குநர் கே.ராஜ்குமார், வனச்சரக அலுவலர் எஸ்.சண்முகம் ஆகியோர்
சம்பவடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு அழுகிய நிலையில் சிறுத்தையின்
தோலை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து புலிகள் காப்பக கள
இயக்குநர் கே.ராஜ்குமார் வெள்ளிக்கிழமை கூறியது: பெரியகுளம் விவசாயத்
தோட்டத்தையொட்டியுள்ள அகழியில் கைப்பற்றிய சிறுத்தையின் தோலை ஆய்வு
செய்தபோது அது 15 நாள்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும் அதன் உடலை
வனவிலங்குகள் தின்றுள்ளதாக தெரிகிறது. இது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம்
வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர் என்றார்
0 comments:
Post a Comment