பவானிசாகரில் தேசிய கல்வி உதவித் தொகை பெற தகுதி தேர்வு
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புஉதவித் தொகை திட்டத்தேர்வை பார்வையிடுகிறார் கோபி மாவட்டக் கல்வி அலுவலர் என்.சிவாஜி.உடன்,பள்ளி தலைமை ஆசிரியர் எம்.நஞ்சன் |
பவானிசாகரில்
சனிக்கிழமை நடந்த தேசிய கல்விஉதவித் தொகை பெறவதற்கான தகுதி தேர்வில் பள்ளி
எட்டாம் வகுப்பு மாணவ,மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
தமிழக அரசுப்பள்ளியில் எட்டாம்வகுப்பு
படிக்கும் பள்ளி மாணவ,மாணவியர்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன்
படிப்புஉதவித் தொகை திட்டத்தேர்வு 2014 பவானிசாகர் அரசு
மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் பவானிசாகர் வட்டாரத்தில்
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இத்தேர்வில்
தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் உதவித்தொகை
வழங்கப்படுகிறது.
கோபிச்செட்டிபாளையம் மாவட்டக் கல்வி அலுவலர்
என்.சிவாஜி தேர்வினைப் பார்வையிட்டார். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி
தலைமை ஆசிரியர் எம்.நஞ்சன் செய்திருந்தார்.
0 comments:
Post a Comment