பவானிசாகர் அருகே மின்கசிவினால் தீவிபத்து.
பவானிசாகர் அருகே தீவிபத்தில் ரு.75000
மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. பவானிசாகர் அருகே உள்ள
வெள்ளியம்பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பாண்டி (78). இவரது
மனைவி லட்சுமி(74). நேற்று காலை வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு தேசிய
ஊரக வேலை உறுதித்திட்டப்பணிக்கு இருவரும் சென்று விட்டனர். மதியம் 12
மணியளவில் திடிரென வீட்டிலிருந்து தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது.
உடனே அக்கம்பக்கத்தினர் சத்தியமங்கலம் தீயணைப்புத்துறைக்கு தகவல்
கொடுத்தனர். பின்னர் தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்தனர். சத்தியமங்கலம்
தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெகதீஸ்வரன் தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள்
போராடி தீயை அணைத்தனர். மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என
தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் தீயை அணைப்பதற்குள் வீட்டின்
மேற்கூரை, பீரோ, டிவி, துணிமணிகள், வீட்டுப்பத்திரம் குடும்ப அட்டை,
ரொக்கப்பணம் உள்ளிட்ட ரு.75000 மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
சேதமடைந்த வீட்டினை நிலவருவாய் ஆய்வாளர் தங்கராஜ், விஏஓ கருப்புசாமி, எஸ்ஐ
கணேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
0 comments:
Post a Comment