தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, February 20, 2014

ஈரோடு புறநகர் மாவட்ட பேரவை சார்பில் பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு

தமிழக முதல்வரின் 66வது பிறந்த நாள் விழா வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக தொண்டர்கள் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அதேபோல், ஈரோடு புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் பண்ணாரிஅம்மன்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறுகின்றன. இது குறித்து ஈரோடு புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம்

முதல்அமைச்சர் பிறந்தநாளையொட்டி வரும் தேர்ததில் 40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற சத்தி பண்ணாரிஅம்மன் கோவிலில் சிறப்புபூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர், கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. 666 பேருக்கு அன்னதானமும், 66 பேருக்கு இலவச உயர்தர சேலையும் கோவில் கருணை இல்லக்குழந்தைகளுக்கு சீருடையும் வழங்கப்படும். கோவிலில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட் ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

0 comments:

Post a Comment