முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1969 & 1970 ம் ஆண்டில் பள்ளி இறுதியாண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. |
பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 1969 & 1970 ம் ஆண்டில் பள்ளி இறுதியாண்டு பயின்ற 17 மாணவ மாணவியர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற கோவை வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் சுப்பைய்யன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் குருசாமி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் தங்கராஜ் வரவேற்றார்.
இவர்களுக்கு ஆசிரியையாக இருந்த கன்னியம்மாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 44 ஆண்டுகளுக்கு பிறகு அறுபதாம் வயதில் சந்தித்த நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். முடிவில் ஓய்வு பெற்ற கோவை வேளாண்மை பல்கலைக்கழக ஆட்சி அலுவலர் ஜெயராமன் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment