பவானிசாகர் அரசுப்பணியாளர் குடியிருப்புக்கு சீல்
பவானிசாகர் அரசுப்பணியாளர் குடியிருப்புக்கு சீல் |
பணி
மாறுதல் செய்யப்பட்ட அரசு பணியாளர்கள் நீண்ட நாள்களாக அவர்களது
குடியிருப்பை காலி செய்யாமல் பூட்டி வைத்திருப்பதால் பொதுப்பணித்துறையினர்
சம்பந்த குடியிருப்புகளுக்கு சீல் வைத்து வியாழக்கிழமை நடவடிக்கை
எடுத்தனர்.
பவானிசாகரில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளில்
பணியாற்றும் ஊழியர்களுக்கு சத்தி சாலையில் அரசு குடியிருப்புகள் உள்ளன.
அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த குடியிருப்புகளில் பணியாளர்கள்
குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு
முன் பவானிசாகரில் இருந்து வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட
ரமேஷ்குமார்,சிவஞானம் ஆகியோர் தங்களது குடியிருப்பை காலி செய்யமால்
இருந்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் அவர்களுக்கு
முறையான தகவல் தெரிவித்தும் அவர்கள் வீட்டை காலி செய்யாமல் பூ்ட்டி
வைத்துள்ளனர். இதையடுத்து, பவானிசாகர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்
விஜயதுரை, அகதிகள் முகாம் பிரிவு உதவி பொறியாளர் சுபத்ரா, கிராம நிர்வாக
அலுவலர் மோகன் மற்றும் காவல்துறையினர்
வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட பணியாளர்கள் குடியிருப்புகளுக்கு சென்று
ஆய்வு செய்தனர். வீடு பூட்டிய நிலையில் இருந்ததால் பொதுப்பணித்துறை
அதிகாரிகள் அந்த வீட்டுக்கு மேலும் ஒரு பூட்டுபோட்டு சீல் வைத்தனர். இது
குறித்த நோட்டீ்ஸ் ஒன்றையும் சம்பந்தப்பட்ட வீட்டின் கதவில் ஒட்டிச்
சென்றனர்.
0 comments:
Post a Comment