பவானிசாகரில் அண்ணா தி மு க அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்
பவானிசாகரில் அண்ணா தி மு க அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் |
பவானிசாகர் ஒன்றிய அம்மா பேரவை சார்பில் அதிமுக அரசின் சாதனை
விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பவானிசாகர் மார்க்கெட் சதுக்கம் மற்றும்
கொத்தமங்கலம் ஊராட்சி வெள்ளியம்பாளையம் பிரிவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம்
தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சதுமுகை ஆறுமுகம்,
பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் வி.ஏ பழனிச்சாமி, ஒன்றிய அம்மா பேரவை
செயலாளர் ரவி, பவானிசாகர் பேரூராட்சித்தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். தலைமைக்கழக பேச்சாளர் மொடக்குறிச்சி சரஸ்வதி அதிமுக ஆட்சியின்
சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். இக்கூட்டத்தில் பவானிசாகர் பேரூராட்சி
துணைத்தலைவர் செல்வம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வேலுமணி மற்றும் ஒன்றிய,
பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் நகர அம்மா பேரவை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment