தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, February 24, 2014

பவானிசாகர் வட்டாரத்தில் 10000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து; 
************************************************************

பவானிசாகர் வட்டாரத்துக்கு உட்பட்ட புன்செய் புளியம்பட்டி, காராபாடி, காவிலிபாளையம், பனையம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 64 மையங்களில் மொத்தம் 10000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது.

புன்செய் புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து தொடக்கவிழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகர் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர்   வி. ஏ.பழனிச்சாமி   தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர்  எஸ்.ஆர். செல்வம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.

இம்முகாமில் காலை 7 மணிமுதல் எராளமான பெண்கள் தங்கள் கைக்குழந்தை மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை ஊற்றி சென்றனர்.  இம்முகாம் பஸ் நிலையம், நகராட்சி திருமண மண்டபம், காந்தி நகர்,பவானிசாகர் அணை பூங்கா, பவானிசாகர் பஸ் நிலையம்,இலங்கை அகதிகள் முகாம்,அங்கன்வாடி மையங்கள்   உள்ளிட்ட முக்கிய இடங்களில்  மாலை 5 மணிவரை முகம் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில்  பு புளியம்பட்டி நகராட்சி துணை தலைவர் பாபு.மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பி.டி.ஆனந்தன் ஆகியோர் உள்பட  மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

0 comments:

Post a Comment