சத்தி ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவில் காவடி ஆட்டம்
சத்தியமங்கலம் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற மஹா சிவராத்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்
வடக்குப்பேட்டை ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவில் விழா வியாழக்கிழமை கணபதி
பூஜையுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய
சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கொடியேற்றுதல்
மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை
காலை சுவாமி ஆற்றில் இருந்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5
மணிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் பவானிஆற்றுக்கு சென்று அங்கு காவடிக்கு
சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, பக்தர்கள், காவடி
ஆட்டத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். வழிநெடுகிலும் காவடி
ஆட்டத்தைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர். சிவன் அவதாரங்களில் ஒன்றான
தன்னாசி மண்உருவசிலையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி பக்தர்கள்
வழிபட்டனர். இரவு நடந்த மஹா அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள்
கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment