தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, February 24, 2014

சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிக்குட்டி மீட்பு




சத்தியமங்கலம் வனப்பகுதியில் தலமலை அருகே தாயை விட்டு பிரிந்த புலிக்குட்டியை வனத்துறையினர் மீட்டனர். 

சத்தியமங்லம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, தலமலை வனப்பகுதியில், தெங்குமராஹாடா ஆதி கருவண்ணராயர் கோயிலுக்கு செல்லும் வழியில் வனத்தையொட்டி, ஜோதிர்லிங்கம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. சனிக்கிழமை இரவு அங்கு காவல் பணியில் இருந்த  அனுமந்தன் என்பவர் புதருக்குள் புலிக்குட்டி ஒன்று இருந்ததை பார்த்துள்ளார். அதனை நாய்கள் துரத்திய நிலையில், அவற்றை விரட்டி விட்டு, துணியை புலிக்குட்டியின் மீது போர்த்தி அதனை பிடித்துள்ளார்.

புலிக்குட்டி பிடிபட்டது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் ராஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து புலிக்குட்டியை மீட்டு, கூண்டில் அடைத்து எடுத்துச் சென்றனர். புலிக்குட்டிக்கு மருத்துவ பரிசோதனை செய்தபின், அதனை வனப்பகுதியில் விடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment