தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, February 28, 2014

பு.புளியம்பட்டி நகர அம்மா பேரவை சார்பில்ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்,நோட்டு புத்தகம்,பேனா வழங்கப்பட்டது.
************************************************************



  முதல்வரின் பிறந்த நாளையொட்டி புன்செய் புளியம்பட்டி நகர அம்மா பேரவை சார்பில் மதரசா குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம்,பேனா மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
   புன்செய் புளியம்பட்டி நகர அம்மா பேரவை சார்பில் முதல்வரின் 66வது பிறந்த நாளையொட்டி புன்செய் புளியம்பட்டி நகர பகுதிகளில் அண்ணா திமுக கட்சி கொடி ஏற்றியும் ,இனிப்புகள் வழங்கியும், கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் கொண்டாடப்பட்டது.
  
 
  தொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முஸ்லிம் மதரசா குழந்தைகள் 207 பேருக்கு நோட்டு புத்தகம்,பேனா மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 புன்செய் புளியம்பட்டி நகர அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர அம்மா பேரவை செயலாளரும்,கூட்டுறவு சங்க தலைவருமான ஆர்.ராமசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.மாவட்ட எம்.ஜி.ஆர் .மன்ற துணை செயலாளர் கே,ஜி.கோபால் வரவேற்று பேசினார். நகர  செயலாளர் எம்.கே.ராஜேந்திரன், நகர் மன்ற துணைத்தலைவர் டி.பாபு , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் நகர துணை செயலாளர் ஆர் நாகராஜ்,ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஆனந்த பிரபா ,பேரவை இணை செயலாளர் ஜி.கே.மூர்த்தி , எ.சி. டபுள்யு பொன்னுசாமி  உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பேரவை இணை செயலாளர் ராஜன் சிவக்குமார் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment