பண்ணாரி கோவிலில் 66 பால் குடம் எடுத்து சிறப்பு வழிபாடு
முதல்வர்
பிறந்த நாளைமுன்னிட்டு, சத்தியமங்கலம் ஒன்றிய அதிமுக சார்பில் பண்ணாரி
கோவிலில் 66 பால்குடம் எடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தமிழக முதல்வர் பிறந்தநாளை அதிமுகவினர் பல்வேறு
நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதேபோல், சத்தியமங்கலம்
ஒன்றியம் மற்றும் கோணமூலை ஊராட்சி கிளை கழகம் சார்பில் திங்கள்கிழமை
பால்குடம் எடுக்கும் விழாவுக்கு சத்தி ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ் தலைமை
வகித்தார். கோணமூலை ஊராட்சிக் கழக செயலாளர் மணிகண்ட சங்கர் முன்னிலை
விகிக்தார். இந்நிகழ்ச்சியில் 66 வாத்தியங்கள் முழங்கவும், 66 ஆயிரம்
பட்டாசுகள் வெடித்தும் 66 காமாட்சி விளக்குகள் அளித்தும் முதல்வர் பிறந்த
நாளை கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர்
எஸ்.ஆர்.செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் மக்களவைத் தேர்தலில் அதிமுக
40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி, கோவிலில் தங்கத்தேர் இழுத்து
வழிபட்டனர்.
0 comments:
Post a Comment