கொமராபாளையம் ஊராட்சியில் நாள்தோறும் குடிநீர் விநியோகம்
சத்தியமங்கலம்
அடுத்துள்ள கொமாரபாளையத்தில் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீ்ர் பிரச்னை
தவிர்க்க பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளதாக ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.நஞ்சப்பன் தெரிவித்தார்.இது குறித்து மேலும் அவர் கூறியது:
இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தில் 24 வீடுகள்
ரூ.28 .80 லட்சம் செலவிலும் முதல்வரின் சூரிய சக்தி வசதியுடன் 45 பசுமை
வீடுகள் ரூ.1.02 கோடி செலவிலும் கட்டப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்
நிதியில் இருந்து கொமாரபாளையம் பவானி ஆற்றில் நீரேற்று கிணறு அமைத்து
குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் ரூ.16.25 லட்சம் ஓதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. ஊராட்சியில் பல்வேறு இடங்களில் ரூ.32.90 லட்சம்
செலவில் கான்கிரீட் தளம், வடிகால் வசதி மற்றும் சிறுபாலங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
தாசரிபாளையம், எம்ஜிஆர்நகர், இந்திராநகர், காமராஜ்நகர், கொமராபாளையம்,குமரன்கரடுஅங்கண் ணகவுன்டர்புதூர்
ஆகிய இடங்களில் ரூ.10 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறுகள்
அமைக்கப்பட்டுள்ளன. காரணச்சேரி, செங்கோட்டையன் நகர் ஆகிய இடங்களில் ரூ.14
லட்சம் செலவில் மகளிர் சுகாதார வளாகமும் காரணக்சேரி கிராமத்தில் ரூ.9
லட்சம் செலவில் சாண எரிவாயு கலன் மற்றும் குண்டு குழியுமாக காணப்பட்ட
காமராஜ்நகர், இந்திராநகர் மற்றும் கொமராபாளையம் அரசு மருத்துவமனை சாலை
ஆகியவை ரூ.16 லட்சம் செலவில் தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment