மாவட்டத்திலேயே 100% வரிவசூல் செய்து கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி சாதனை
திருப்பூர்
மற்றும் ஈரோடு மாவட்டத்திலேயே கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 100%
வரிவசூல் செய்து சாதனை படைத்த பேரூராட்சி வரிவசூலர் அ.முருகேசனுக்கு
பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைஅடிவாரத்தில்
உள்ளது கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி.11 ஆயிரத்து 100 பேர் மக்கள் தொகை
கொண்ட இந்த 2ம் நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.
இப்பேரூராட்சியில் 3028 வீடுகளுக்கு சொத்துவரி கேட்பு நிர்ணயம்
செய்யப்பட்டு, கேட்பு தொகை அனைத்தும் ஜன.31ம் தேதியில் வசூல் செய்து
முடிக்கப்பட்டுள்ளது.
மார்ச்.31ம் தேதி முடிக்கப்பட வேண்டிய சொத்துவரி
மற்றும் வரியில்லா இனங்கள் அனைத்தும் 60 நாட்களுக்கு முன்பாகவே 100% வசூல்
செய்து சாதனை படைத்த கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியின் வரிவசூலர் அ.
முருகேசனுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் வீ. இராமகிருஷ்ணன், பேரூராட்சி
தலைவர் கே. சுப்பிரமணியம் ஆகியோர் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினர்.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்திலேயே
கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி மட்டுமே 100 சதம் வரிவசூல் செய்து
சாதனைபடைத்துள்ளது என செயல்அலுவலர் வி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment