சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் கல்லூரி பட்டமளிப்பு விழா
சத்தியமங்கலம்
பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற 14வது பட்டமளிப்பு
விழாவில் 1315 பேருக்கு பொறியியல் பட்டங்கள் வழங்கப்பட்டன.
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன்
தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற 14–வது பட்டமளிப்பு விழாக்கு கல்லூரித்
தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பண்ணாரி அம்மன் சர்க்கரை
ஆலையின் நிர்வாக இயக்குனர் பி.சரவணன், கல்லூரியின் ஆலோசகர்
எம்.பி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் என்.ரங்கராஜன்
வரவேற்றார்.
இதில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் கே.ராமசாமி பேசுகையில் தற்போதைய பொறியாளர்கள புதிய
தொழில்நுட்பங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க வேண்டும்
என்றும் உலகளவில் இந்திய பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுவர்கள்
தான் முதன்மையாக திகழ்கிறார்கள் என்றும் புதுமையும் புதிய
கண்டுபிடிப்புகள் இந்தியர்களின் மரபணுபில் பதிந்துள்ளது என்றும்
தெரிவித்தார்.
விழாவில் 1,315 மாணவ, மாணவிகளுக்கு முனைவர், முதுகலை
மற்றும் இளங்கலை பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரியின் சிறந்த மாணவிக்கான
ஸ்ரீமதி கலாவதி கார்த்திகேயன் தங்கப்பதக்கத்தை மின்னியல் துறை மாணவி
டி.என்.சபர்மதிக்கும், பாரதரத்னா சி.சுப்பிரமணியம் தங்கப்பதக்க விருதினை
மின்தொடர்பியல் மாணவி ஜி.கே.சரண்யாவுக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ்.வி.அழகப்பன்,
எஸ்.வி.ஆறுமுகம், குண்டன், பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளிக்கூடத்தின்
செயலாளர் ஏ.என்.குழந்தைசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment