தாசரிபாளையம் அம்மா திட்ட முகாமில் 45 மனுக்கள் மீது உடனடி தீர்வு
சத்தியமங்கலம் தாசரிபாளையத்தில் வருவாய்த்துறையின் மக்களைத் தேடி
அம்மா திட்ட முகாமில் 45 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
சத்தியமங்கலம்
அடுத்துள்ள கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தாசரிபாளையத்தில்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாய்த்துறையின் மக்களைத் தேடி அம்மா திட்ட
முகாமுக்கு கொமாரபாளையம் ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.நஞ்சப்பன் தலைமை
வகித்தார். சத்தி சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் எம்.ஆறுமுகம் முன்னிலை
வகித்தார். முகாமில், குடும்ப அட்டை, சாதிச்சான்றிதழ்,பட்டா மாறுதல்,
குடும்ப அட்டையில் பெயர் நீக்கல் மற்றும் சேர்த்தல், முதியோர் உதவித்தொகை
உள்ளிட்ட 64 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 45 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் எம்.செல்வராஜ், வருவாய் அலுவலர்
டி.வான்மதி, கிராம நிர்வாக அலுவலர் எம்.ஜெயம்மா, கேஎன் பாளையம் தொடக்க
வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் டி.கே.சேனாபதி, தாசரிபாளையம் அதிமுக
செயலாளர் முத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment