சத்தியில் பள்ளி மாணவன் மாயம்
சத்தியமங்கலம், மார்ச்.1. சத்தியமங்கலத்தில் பள்ளிக்கு வந்த மாணவன்
மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் விஎன்எஸ் நகரைச்சேர்ந்தவர்
கோபால்(40). சென்டரிங் தொழிலாளியான இவரது மகன் கார்த்திக் (எ) கௌதம் (14).
சத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறான்.
கவுதம் கையில் அடிபட்டுள்ளதால் கட்டு போடப்பட்டுள்ளது. நேற்று காலை வழக்கம்
போல் பள்ளி செல்வதாக தாயார் யசோதாவிடம் கூறிவிட்டு தந்தை கோபால் பள்ளிக்கு
கொண்டு வந்து விட்டுச்சென்றுள்ளார். கவுதம் பள்ளி வகுப்பறைக்கு சென்று
பையை வைத்துவிட்டு பள்ளியை விட்டு வெளியே சென்று விட்டான். கவுதம்
பள்ளியில் இல்லாததைக் கண்டு ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே கோபால் மற்றும் அவரது உறவினர்கள் கவுதமை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பவானி ஆற்றுப்பாலத்திற்கு கீழ் அவனது செருப்பு, சட்டை மற்றும்
பள்ளி அடையாள அட்டை இருந்தது. இதனால் ஆற்றில் குளித்த போது காணாமல்
போய்விட்டானா என்ற சந்தேகத்தில் ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அங்கும்
இல்லாததால் வேறு எங்காவது சென்று விட்டானா என தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
0 comments:
Post a Comment