சத்தியில் சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்
சத்தி தாய்சேய் நலவிடுதியில் சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாமை வியாழக்கிழமை துவக்கி வைக்கிறார் சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம்.
|
சத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு தாய்சேய் நல மருத்துமுகாமில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் தாய்சேய் நல விடுதியில் நடைபெற்ற இம்முகாமுக்கு நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர்கள் எஸ்.பி.கணேசன் நோயாளிகளை பரிசோதனை செய்தனர். இதில் 120க்கும் மேற்பெண்களுக்கு ரத்தப்பரிசோதனை, ஸ்கேன் மற்றும் ஆய்வகப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன்,எச். சையத் பாசில்,எஸ்.லட்சுணன், ஜி.சரோஜினி குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் சக்திவேல் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்திருந்தனர்
0 comments:
Post a Comment