மார்ச் 18-ல் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா
பண்ணாரி அம்மன் கோயில் |
பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா மார்ச் 18ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழக கர்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு
பண்ணாரி அம்மன் கோயில் விழா மார்ச் 3ம் தேதி திருப்பூச்சாட்டுதலுடன்
துவங்குகிறது. 10ம் தேதி திங்கள்கிழமை இரவு கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியும்
அதனைத் தொடர்ந்து, கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா நடைபெறும்.
மார்ச் 17ம் தேதி இரவு அம்மன் அழைப்பும் குண்டம்
விழாவும் 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல்
நிகழ்ச்சி நடைபெறும். 19ம் தேதி இரவு புஷ்பரதம்,20ம் தேதி மஞ்சள் நீராட்டு
விழா மற்றும் மாவிளக்கு எடுத்தல், 21ம் தேதி திருவிளக்குப்பூஜை மற்றும்
தங்கத்தேர் புறப்பாடும் மார்ச்.24ம் தேதி மறுபூஜை நடைபெற உள்ளது. விழா
ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டி குழுவினர் செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment