முதல்வர் பிறந்தநாள் விழா: 66 மாற்று திறனாளிகுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கல்
தமிழக முதல்வர் 66வது பிறந்த நாளையொட்டி, சத்தி நகர பேரவை சார்பில் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.
தமிழக
முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் பல்வேறு
நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.சத்தி நகர பேரவை சார்பில் நடைபெற்ற
அமைத்து நிகழ்ச்சிகளுக்கு சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம்
முன்னிலை வகித்தார். அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தலைமை வகித்து
நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சத்தி பவானீஸ்வரர் ஆலயத்தில் முதல்வர்
பெயரில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து
ஏழைகளுக்கு அன்னதானமும் 66 மாற்று திறனாளிகளுக்கு வேஷ்டி சேலைகள்
வழங்கப்பட்டன. சத்தி அரசு மருத்துவமனையில் தொழுநோயாளிகளுக்கு பால்ரொட்டி
மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சித் தலைவர்
எஸ்.ஆர்.செல்வம், நகர்மன்ற உறுப்பினர்கள் எச். சையத் பாஷில், ராணிக்குமார்,
டி,கே.ஈஸ்வரன்,ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் தேவராஜ் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment