புன்செய் புளியம்பட்டி அருகே மரம் நடும் விழா
கலெக்டர் துவக்கி வைத்தார்.
புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையம் கிராமத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழாவை கலெக்டர் வி.கே.சண்முகம் துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும்பணியை முதல்வர் துவக்கி வைத்தார். அதன்படி புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையம் கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு விழாவை கலெக்டர் வி.கே.சண்முகம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர்.
கலெக்டர் துவக்கி வைத்தார்.
புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையம் கிராமத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழாவை கலெக்டர் வி.கே.சண்முகம் துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும்பணியை முதல்வர் துவக்கி வைத்தார். அதன்படி புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையம் கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு விழாவை கலெக்டர் வி.கே.சண்முகம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர்.
0 comments:
Post a Comment