சத்தியில் ஸ்ரீ ராதாமாதவ விவாஹ மஹோத்ஸவ உற்சவ விழா
விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திவ்யநாம பஜனையில் பங்கேற்ற பக்தர்கள் |
சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ ராதாமாதவ விவாஹ மஹோத்ஸவ விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம்
அக்ரஹாரம் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரரேஸ்வர் ஆலயத்தில் ஸ்ரீ ராதாமாதவ விவாஹ
மஹோத்ஸவ விழாவில் பட ஆவாஹனத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, புதன் மற்றும்
வியாழக்கிழமை நாள்களில் கோவிலில் அஷ்டபதி பஜனை நடைபெற்றது. இதில் ஏராளமான
பெண்கள் கலந்துகொண்டனர்.
சனிக்கிழமை காலை வீதிபஜனையும் தொடர்ந்து மாலை 6 மணிக்கு
தோடயமங்களம், குருத்தியானம், பஞ்சபதி மற்றும் திவ்யநாமம் பஜனையும்
நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை உஞ்சவிருத்தி, சீர்வரிசை கொண்டு வருதலை
தொடர்ந்து, ஸ்ரீ ராதா மாதவ விவாஹ மஹோத்ஸவ உற்சவம் நடைபெற்றன. பிற்பகலில்
நடைபெற்ற ஆஞ்சநேய உற்சவம் மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமானோர்
கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை விழா சாகேதராமா பஜனா மண்டலி கமிட்டிக்குழுவினர் செய்து இருந்தனர்
0 comments:
Post a Comment