தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, February 12, 2014

பண்ணாரி  வனப்பகுதியில் மக்காத குப்பைகள் சேகரிப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில்
பண்ணாரியம்மன் கல்லூரி பசுஞ்சூழல் இயக்க மாணவர்கள் மக்காத குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 பண்ணாரி  அம்மன் தொழில்நுட்பக்  கல்லூரியின் பசுஞ்சூழல் இயக்கம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும் இணைந்து சத்தியமங்கலம் வனப் பகுதியில் மக்காத குப்பைகளை சேகரித்ததுடன் விழிப்புணர்வு பலகையும் நடப்பட்டது. இந்நிகழச்சிக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணைஇயக்குனர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் சண்முகம்  முன்னிலை வகித்தார்.
பண்ணாரியம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் பசுஞ்சூழல் இயக்க மாணவர்கள் 121 பேர்  பண்ணாரி  அம்மன் கோவில் அருகில் தொடங்கி திம்பம் முதல் கொண்டை ஊசிவளைவு வரை சாலையின் அருபுறமும் உள்ள வனப்பகுதிகளில் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு டன் மக்காத குப்பை மட்டும் கண்ணாடிகளை சேகரித்தனர். குப்பைகள் டிராக்டரில் நிரப்பப்பட்டு அதனை தகுந்த முறையில் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது.


0 comments:

Post a Comment