புஞ்சைபுளியம்பட்டியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.
புஞ்சைபுளியம்பட்டியில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்,
மாவட்ட ஊராட்சிகுழுத்தலைவர் பங்கேற்பு.
புஞ்சைபுளியம்பட்டி;ஜூலை;29;
மாவட்ட ஊராட்சிகுழுத்தலைவர் எஸ்.ஆர்.செல்வம் பங்கேற்றார்.
புஞ்சைபுளியம்பட்டி
அருகே உள்ள நல்லூரில்,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெற்றி
பாராமெடிக்கல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, கல் லூரி
தாளாளர் டி.எஸ்.லோகநாதன் தலைமை வகித்தார்.பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழு
தலைவர் வி.ஏ.பழனிச்சாமி,விரிவுரையாளர் கே.எஸ்.ஸ்ரீதர்,குருமூர்த்தி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகம்மது நூருல்லா, புனிதரமலான் சிந்தனைகள் பற்றி கல்லூரி மாணவியர்களிடம்,எடுத்துரைத்தார் .சிறப்பு அழைப்பாளராக,ஈரோடு மாவட்ட ஊராட்சிகுழுத்தலைவர் எஸ்.ஆர்.செல்வம் கலந்துகொண்டு,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,ஊராட்சி தலைவர்கள் காராப்பாடி வெள்ளியங்கிரி,விண்ணப்பள்ளி கணேசன்,தேசிபாளையம் மயிலாள் சம்பத்,மூர்த்தி,பரக்கத்துல்லா,
மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment