தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, July 28, 2014

ஆடி அமாவாசையையொட்டி புன்செய் புளியம்பட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு.
 
 



 
புன்செய் புளியம்பட்டி;ஜூலை;27;

ஆடி அமாவாசையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள புன்செய் புளியம்பட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

புன்செய் புளியம்பட்டியில், மாரியம்மன்,ப்ளேக் மாரியம்மன்,ஊத்துக்குளி அம்மன்  கோவில்கள்  உள்ளது. இங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பஞ்சாமிர்தம், இளநீர், தேன் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு நின்றநிலையில் அம்மனுக்குபுத்தாடை உடுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்குபொங்கல்,பிரசாதம்,
 ராகி கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.பின்னர்,அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மாரியம்மன்,ப்ளேக் மாரியம்மன் உற்சவர்,கோவில் உலா நடைபெற்றது.இதில் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும்,கரிவரதராஜபெருமாள்  கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் காமாட்சி அம்மன்  கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. வனக்கோவில் மற்றும் கிராமங்களில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

0 comments:

Post a Comment