தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, July 28, 2014

சிறுத்தை சிக்கியதால் மலைவாழ்மக்கள் மகிழ்ச்சி

இயல்பு நிலைக்கு திரும்பியது தலமலை வனச்சாலை

 
 
சத்தியமங்கலம்,
மனிதர்களை கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் பிடித்துள்ளதால் காளிதிம்பம், தலமலை,பெஜலட்டி ஆகிய கிராமங்களில் இயல்பு நிலை திரும்பியது.

திம்பம் மலைப்பகுதியில் ஆள்கொல்லி சிறுத்தை தென்பட்டதால் திம்பம் வனச்சோதனை சாவடி வழியாக மலைவாழ் மக்கள் செல்ல வனத்துறை தடைவிதித்தது.இதனால், காளிதிம்பம், தலமலை, பெஜலட்டி,ராமரணை போன்ற கிராமமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கிராமமக்கள் அந்தந்தப் பகுதியில் முடங்கி கிடந்தனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும்,காய்கறி வாகனங்கள், திறந்த வெளி வாகனங்களில்  செல்லும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.தற்போது, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தையை பிடித்து சென்னை வணடலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறுத்தையை பிடித்த வனத்துறையினருக்கு மலைவாழ் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிறுத்தையின் அச்சம் போனதால் தலமலை வனச்சாலை வழியாக மீண்டும் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல துவங்கினர்.தலமலை பேருந்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 43 நாள்களுக்கு பிறகு தலமலைப்பகுதியில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது

0 comments:

Post a Comment