தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, July 28, 2014

புதுப்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டைகள். ட்ரீ அறக்கட்டளை வழங்கியது.

 
 

புதுப்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு அடையாள அட்டைகளை ட்ரீ அறக்கட்டளை வழங்கியது.

பு.புளியம்பட்டி அருகே உள்ள புதுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் மொத்தம் 30 மாணவ- மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.இவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு,ட்ரீ அறக்கட்டளை தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்து பேசினார்.பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சீரங்கசாமி,சிவானந்தம்,ஆர்.சண்முகசுந்தரம்,சக்தி டயர்ஸ் பிரகாஷ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியை சி.துளசிமணி,ஆசிரியை கே.ஜெயச்சித்ரா ஆகியோர் வரவேற்று பேசினார்.
நல்லூர் ஊராட்சித்தலைவர் காளியம்மாள்  மாணவ- மாணவியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கினார்.இப்பள்ளியில் பயிலும்  மொத்தம் 30 மாணவ- மாணவியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில்,கவுன்சிலர் மலர்விழி,சத்துணவு அமைப்பாளர் அரங்கசிவகாமி, டி.தீபா, ரஞ்சித்குமார்,கிராம கல்விக் குழுவினர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள்,சமூகநல ஆர்வலர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment