லாரி மோதி சோதனைச்சாவடி கட்டிடம் சேதம்
சத்தியமங்கலம், ஆகஸ்ட் 1: சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில்
வனத்துறைக்கு சொந்தமான சோதனைச்சாவடி கட்டிடம் உள்ளது. கட்டிடம்
பழுதடைந்தள்ளதால் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்து தாளவாடியிலிருந்து கிரானைட் கல் பாரம் ஏற்றிய லாரி சேலம் செல்வதற்காக பண்ணாரி அருகே வந்துகொண்டிருந்தது. லாரியை திருத்தணியை சேர்ந்த டிரைவர் ரவிச்சந்திரன் ஓட்டி வந்தார். பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வந்தபோது ரோடு டிவைடர் இருந்ததால் டிரைவர் வேகத்தை குறைக்க முயற்சித்து பிரேக் போட்டபோது பிரேக் பிடிக்காததால் லாரி கட்டுப்பாட்டை இழந்து வனசோதனைச்சாவடியை ஒட்டியுள்ள வேப்பமரத்தின் மீது மோதி மரம் முறிந்து வனத்துறை கட்டிடத்தையும் மோதி நின்றது. இதனால் வனசோதனை சாவடி கட்டிடம் இடிந்து சேதம் ஏற்பட்டது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வனத்துறைக்கு சொந்தமான சோதனைச்சாவடி கட்டிடம் உள்ளது. கட்டிடம்
பழுதடைந்தள்ளதால் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்து தாளவாடியிலிருந்து கிரானைட் கல் பாரம் ஏற்றிய லாரி சேலம் செல்வதற்காக பண்ணாரி அருகே வந்துகொண்டிருந்தது. லாரியை திருத்தணியை சேர்ந்த டிரைவர் ரவிச்சந்திரன் ஓட்டி வந்தார். பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வந்தபோது ரோடு டிவைடர் இருந்ததால் டிரைவர் வேகத்தை குறைக்க முயற்சித்து பிரேக் போட்டபோது பிரேக் பிடிக்காததால் லாரி கட்டுப்பாட்டை இழந்து வனசோதனைச்சாவடியை ஒட்டியுள்ள வேப்பமரத்தின் மீது மோதி மரம் முறிந்து வனத்துறை கட்டிடத்தையும் மோதி நின்றது. இதனால் வனசோதனை சாவடி கட்டிடம் இடிந்து சேதம் ஏற்பட்டது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment