புன்செய் புளியம்பட்டியில் விடியல் மாணவர் விருதுகள் வழங்கும் விழா- 600 மாணவ மாணவியர்களுக்கு வழங்க பட்டது.
புன்செய் புளியம்பட்டி ஜூலை 22:
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம், ஸ்ரீ தேனு சில்க்ஸ், அம்மா மெட்ரிக் பள்ளி சார்பில் 2013 - 2014 ஆம் கல்வி ஆண்டில் மாநில அளவில் மற்றும் பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு விடியல் மாணவர் விருதுகள் வழங்கும் விழா புன்செய் புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது .
விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார்.. அம்மா மெட்ரிக் பள்ளியின் செயலாளர் ராணி லக்ஷ்மி அன்பு குத்து விளக்கேற்றினார். ஞானவேல் ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர் எஸ்.ஞானபண்டிதன் தலைமை தாங்கினார். ஸ்ரீ தேனு சில்க்ஸ் நிறுவனர்கள் ஆர்.மூர்த்தி, ஆர்.தருமன், டாக்டர் சுப்பிரமணியம், பி.கே.சண்முகம், ஞானதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைகழகத்தின் அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் மா.பத்மநாபன் , ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி, புன்செய் புளியம்பட்டி நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கோபி, ஈரோடு, கோவை, திருப்பூர் கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட 200 இக்கும் மேற்பட்ட உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் 2013-2014 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த 500 மாணவ மாணவியர்களுக்கு விடியல் மாணவர் விருதுகள் வழங்கப்பட்டது. மேலு
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் சமூகநல தலைவர் கே.தருமராசு, செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், உறுப்பினர்கள் லோகநாதன், சக்திவேல், பாபு, வடிவேலன், ரமேஷ்குமார், பேராசிரியர் சக்திவேல், கிருஷ்ணசாமி, கமலகண்ணன், ஸ்ரீனிவாசன், பிரகாஷ், கந்தசாமி, தாமரைக்கண்ணன், மகேஷ்குமார், சங்கீதா, அருள்மொழி, லாவண்யா, ஹரிப்ரியா மற்றும் பலர் செய்திருந்தார்கள்.
0 comments:
Post a Comment