சத்தியில் வேளாண் பல்கலைக்கழக மாணவியருக்கு களப்பயிற்சி
சத்தியமங்கலம்,ஜூலை 14:
கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவியருக்கு பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள தோட்டங்களில் களப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஊரக
வேளாண் பயிற்சி மற்றும் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கோவை வேளாண்
பல்கலைக்கழக மாணவிகள் சத்தி அரியப்பம்பாளையத்தில் தங்கி பயிற்சி பெற்று
வருகின்றனர்.
அவர்கள் கிராமங்களில் தங்கி வேளாண்மைத் துறை,
தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை போன்ற வேளாண்மை சார்ந்த
அனைத்து துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து பயிற்சி
பெற்றனர். விவசாயிகளிடமும் நேரடியாகத் தொடர்பு கொண்டு நவீன தொழில்
நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும்,பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளிடம்
நேரடியாகக் கேட்டறிந்து கள அனுபவம் பெற்றனர்.சிவியார்பாளையத்தில் தென்னை
டானிக்கை வேர் மூலம் தென்னைக்கு செலுத்தும் முறையை விவசாயிகளுக்கு மாணவிகள்
விளக்கினர். தென்னை டானிக் தமிழநாடு வேளாண் பல்கலைக்கழக பயிர் வினையல்
துறையில் தயாரிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment