தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, July 28, 2014

காராப்பாடி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம்.179 மனுக்களுக்கு உடனடி தீர்வு.

 
பு.புளியம்பட்டி;ஜூலை;27;

பு.புளியம்பட்டி அருகே உள்ள காராப்பாடி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.இதில்,179 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,காராப்பாடி ஊராட்சியில்,அம்மா திட்ட முகாம், ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.முகாமிற்கு,மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தலைமை வகித்து பேசினார்.பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வி.ஏ.பழனிச்சாமி,காராப்பாடி ஊராட்சி தலைவர் கே.வெள்ளியங்கிரி,வட்டார வளர்ச்சி அதிகாரி என்.சாந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சத்தியமங்கலம் வட்டாட்சியர் சேதுராஜ்,சிறப்பு வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு,பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
முகாமில்,மொத்தம் 213 மனுக்கள் பெறப்பட்டன.அதில்,179 மனுக்களுக்கு உடனடியாக  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில்,விண்ணப்பள்ளி ஊராட்சி தலைவர் கணேசன்,ஒன்றிய கவுன்சிலர் சின்னச்சாமி,கிராம நிர்வாக அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன்,லதா, காராப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம்,செல்லம்பாளையம்,பா
றைப்புதூர்,கோட்டபாளையம் கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். 

0 comments:

Post a Comment