தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, July 17, 2014

புன்செய் புளியம்பட்டியில் விடியல் மாணவர் விருதுகள் வழங்கும் விழா
ஜூலை 20 ஞாயற்றுகிழமை நடைபெறுகிறது.




           புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம், ஸ்ரீ தேனு சில்க்ஸ், அம்மா மெட்ரிக் பள்ளி சார்பில் 2013 - 2014 ஆம் கல்வி ஆண்டில் மாநில அளவில் மற்றும் பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு விடியல் மாணவர் விருதுகள் வழங்கும் விழா வருகின்ற 20-07-2014 ஞாயற்றுகிழமை காலை 9.30 மணிக்கு புன்செய் புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

           விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்கிறார். அம்மா மெட்ரிக் பள்ளியின் செயலாளர் ராணி லக்ஷ்மி அன்பு குத்து விளக்கேற்றுகிறார். ஞானவேல் ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர் எஸ்.ஞானபண்டிதன் தலைமை தாங்குகிறார். ஸ்ரீ தேனு சில்க்ஸ் நிறுவனர்கள் ஆர்.மூர்த்தி, ஆர்.தருமன், டாக்டர் சுப்பிரமணியம், பி.கே.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

        கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைகழகத்தின் அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் மா.பத்மநாபன் விழா சிறப்புரை ஆற்றுகிறார். ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி, புன்செய் புளியம்பட்டி நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார்கள்.

        இந்நிகழ்ச்சியில் கோபி, ஈரோடு, கோவை, திருப்பூர் கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட 200 இக்கும் மேற்பட்ட உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் 2013-2014 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த சுமார்  600 மாணவ மாணவியர்களுக்கு விடியல் மாணவர் விருதுகள் வழங்கபடுகின்றன. மேலும் 100 % தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விடியல் சாதனை பள்ளி விருதுகள் வழங்கபடுகின்றன. சத்தி, கோபி பகுதிகளில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு விடியல் சாதனை விருதுகள் வழங்கபடுகின்றன.

      இவ்விழாவில் மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொள்ளலாம்.  மேலும் விபரங்களுக்கு எஸ்.ஜெயகாந்தன் - 98427 80240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிறைவில் விடியல் தலைவர் வாணி கே. தருமராசு நன்றி கூறுகிறார்.





0 comments:

Post a Comment